Related Posts Plugin for WordPress, Blogger...
Flying bat in a marquee
உங்களுடைய கருத்துக்கள் மற்றும் கார்த்திக்கின் தகவல்களை அனுப்பவும் எமது தளத்தில் பிரசுரிக்கப்படும்.அனுப்பவேண்டிய முகவரி மின்னஞ்சல்Email - actorkarthik@gmail.Com

மகனுக்கு போட்டியா? கார்த்திக் சொன்ன பதில்!

Posted on
  • by
  • Welcome Karthik Fans
  • in
  • Labels:
  • றிமுகமான முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியைத் தொட்டு, 80-களின் நவரச நாயகனாகவும், பெண்களின் கனவு நாயகனாகவும் வலம் வந்தவர் கார்த்திக்.


    தன்னுடைய தந்தை முத்துராமன் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக இன்றுமிருக்க, கார்த்திக்கின் மகனும் இளம் தலைமுறை நடிகர்களில் முக்கியமானவராக இருக்க இராவணன் படத்தில் ரீஎன்ட்ரி ஆகி அநேகன் வரை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அமரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார் கார்த்திக்.






    வெத்தல போட்ட சோக்குல’ என்று கார்த்திக் பாடுவதும், அதற்கு ஏற்ப சில்க் ஸ்மிதாவின் நடனமும் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று. இந்த பாடல் பெறும் வெற்றியடைந்தாலும், மலையளவு இருந்த எதிர்பார்ப்புகளை உடைத்து அமரன் திரைப்படம் கார்த்திக்கின் திரைவாழ்க்கையில் அமைந்தது. ஆனால் அமரன் 2 திரைப்படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார் கார்த்திக். 



    அமரன் இரண்டாம் பாகம் பற்றி பேசும் போது “அமரன் 2 திரைப்படத்தின் மூலம் என்னை மீண்டும் திரையுலகிற்கு அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் ராஜேஷ்வர். நடுவில் ஏற்பட்ட இந்த இடைவெளிக்கு காரணம் எனக்கு ஏற்பட்ட விவாகரத்து தான். நடிப்பை காதலித்தேன். விவாகரத்து செய்தேன். மீண்டும் காதலிக்க துவங்கிவிட்டேன். எல்லோருடைய வாட்சும்(கைக் கடிகாரம்) எப்போதாவது நின்றுவிடும். நாம் தான் அதை மீண்டும் ஓட வைக்கவேண்டும். நான் என் வாட்சை ஓடவைத்துவிட்டேன். இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்கள். அவர்களை இன்னும் தேர்வு செய்யவில்லை. மற்ற நடிகர்,நடிகைகள் தேர்வு நடந்துவருகிறது” என்று கூறினார்.

    மேலும் உங்கள் மகனுக்கு போட்டியாக வருகிறீர்களா? என்ற கேள்விக்கு கார்த்திக், “என் மகனுக்கு போட்டியாக நான் எப்படி வரமுடியும்? அவர் வழியும் என் வழியும் வேறு. அவர்கள் இளைஞர்களின் நாயகன்” என்று கூறினார்.


    Related Posts :



    0 comments:

    Post a Comment