
இந்த படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அதே கே.ராஜேஷ்வர், இந்த இரண்டாவது பாகத்தையும் இயக்கவுள்ளார். காதல் மன்னனாக திரையில் வலம் வந்து கொண்டிருந்த கார்த்திக்கை ஒரு கேங்ஸ்டாராக வித்தியாசமான கேரக்டரில் அமரன் முதல் பாகத்தில் நடிக்க வைத்த கே.ராஜேஷ்வர், மீண்டும் கார்த்திக்கை அதே போன்ற கேரக்டரில் நடிக்க வைக்கவுள்ளார்.

சமீபத்தில் தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தில் வில்லனாக ரீ எண்ட்ரியான கார்த்திக்கின் நடிப்பு, பெரிதும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டதால், மீண்டும் அவரை நாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக ராஜேஷ்வர் கூறியுள்ளார். இந்த படத்தின் போட்டோஷூட் சமீபத்தில் முடிவடைந்துள்ளதாகவும், இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பை லண்டன், மாஸ்கோ, மற்றும் இத்தாலி ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ள கே.ராஜேஷ்வர், இந்த படத்தை ஓர்லவ் மீடியா புரடொக்ஷன்ஸ்'(Orlov Media Productions) என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறினா
0 comments:
Post a Comment