பிஸியாகும் கார்த்திக்
Posted on by Welcome Karthik Fans in
Labels:
Media News
திங்கள், 21 டிசம்பர் 2009
ராவண் படத்தில் ரீ எண் ட்ரியாகும் கார்த்திக் தொடர்ந்து நடிப்பது என முடிவு செய்திருக்கிறார். மாஞ்சா வேலு படத்தில் ஹீரோவுக்கு அண்ணனாக வருகிறார். போலீஸ் அதிகாரி வேடம்.
முன்பு மாதிரி கால்ஷீட் டபாய்ப்பதெல்லாம் இல்லை. நான் புது மனுஷனாயிட்டேன் என்று சொல்வது போலவே நடந்தும் கொள்வதாக பாராட்டு பத்திரம் வாசிக்கிறார்கள்.
மாஞ்சா வேலுக்குப் பிறகு ஆர்கே நடிக்கும் புலி வேசம் படத்தில் நடிக்கிறார் கார்த்திக். பி.வாசு படத்தை இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஹீரோயின் முடிவாகாவிட்டாலும் படத்தை தொடங்கிடலாம் என முனைப்பு காட்டுகிறார் ஆர்கே. காரணம், படத்தை தயாரிப்பதும் அவரே.
கார்த்திக்கின் மாற்றத்துக்குப் பிறகு அவரை வைத்து படம் பண்ண இளம் இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.இதனால் புல்லாகி வருகிறது நவரச நாயகனின் கால்ஷீட் டைரி.
Related Posts :
Labels:
Media News
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment